நடிகை கோவை சரளாவின் அம்மாவா இது? 94 வயது… தனியாக வாழ்க்கை: எப்படி இருக்காங்க பாருங்க…

      தமிழ்த்திரையுலகில் நகைச்சுவைக்கு பல ஆண் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தரப்பில் அப்படியான நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆச்சி என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு பின்பு கோவைசரளா மட்டும்தான் நினைவில் தங்குகிறார். 

   காமெடி நடிகையாலும் கமல் போன்ற பெரிய நடிகருக்கு ஜோடியாக நடிக்க முடியும் என நிரூபித்தவர் நடிகை கோவைசரளா. 1983ல் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் கோவைசரளா.  கரகாட்டக்காரன் திரைப்படம் கோவைசரளாவுக்கு வேற லெவல் பெயரை வாங்கிக் கொடுத்தது. இதேபோல் வைகைப்புயல் வடிவேலுவுடன் சேர்ந்து இவர் நடித்த காமெடிகள் எல்லாம் மெகா ஹிட் அடித்தது.   

   லேடி காமெடி கிங்கான கோவைசரளா இதுவரை 750க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். 2008க்கு பின்பு அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. 2013ல் காஞ்சனா படம் மூலம் மீண்டும் வாய்ப்பை பெற்று சீனுக்கு வந்து செகண்ட் இன்னிங்ஸ் நின்று ஆடுகிறார் கோவைசரளா. தன் உடன்பிறந்த நான்கு சகோதிரிகள், ஒரு சகோதரனுக்கு திருமணம் செய்துவைத்த கோவைசரளா அவர்மட்டும் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. பல ஏழைக்குழந்தைகளை படிக்கவைக்கும் கோவைசரளா, தன் உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளையே தன் பிள்ளைகளாக பாவித்துவருகிறார்.   முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி போய் உதவிசெய்கிறார் கோவைசரளா.

  நடிகை கோவை சரளாவின் அம்மாவின் பேட்டி இப்போது முதன் முதலாக இணையத்தில் வெளியாகி உள்ளது. தன் அம்மாவுக்கு கோவை சரளா கட்டிக்கொடுத்திருக்கும் வீட்டிற்கு சக்தி இல்லம் என பெயர் வைத்துள்ளார். அந்த அம்மாவுக்கு 94 வயது ஆகிறது. தன் தாய் வீட்டுக்குப் பக்கத்திலேயே தனக்கென தனி ஒரு வீடு கட்டியுள்ளார் கோவை சரளா. அவரது அம்மாவுக்கு, அவர் தான் கடைசிபிள்ளை. அந்த அம்மாவும், தான் பெரிய நடிகைகளின் தாய் என இல்லாமல் அனைவரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர். அவரது தாயாரின் புகைப்படமும், வீடியோவும் முதன் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது. நீங்களே பாருங்களேன்.