ஆண்களோடு போட்டிபோட்டு நாதஸ்வரம் வாசித்து அசத்திய பெண்கள்.. என்ன ஒரு திறமைப் பாருங்க..!

    இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது இங்கே சில பெண்களுக்கு  இருக்கும் இசைத் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த பெண்களுக்கு  என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். 

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும்,  சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும்.அதேபோல் கோயில் விசேசங்களுக்கும் முதலில் மேளக்கலைஞர்களையே புக் செய்வார்கள். கோயில் விசேசங்களிலுக்கு இசையை ரசிக்க வருபவர்களும் அதிகளவில் உண்டு. அதிலும் நாதஸ்வர இசைக்கு மயங்காதவர்களே யாரும் இல்லை எனச் சொல்லிவிடலாம். 

     இங்கேயும் அப்படித்தான்..ஒரு விசேச வீட்டிற்கு மேளக்காரர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் மணப்பந்தலில் அமர்ந்திருந்தனர். அதில் சரிபாதி பெண்கள். அவர்கள் சிங்கார வேலனே வா என்னும் பாடலுக்கு ஆண்களுக்கு இணையாக செம நேர்த்தியாக வாசித்து அசத்தினர். வந்திருந்த பார்வையாளர்களே அடடே பெண்களுக்கு இப்படி நாதஸ்வரம் வாசிக்கும் திறமையா? என வியந்து போயினர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.