மாலை மாற்றும்நேரத்தில் மாப்பிள்ளை கன்னத்தில் பளார்.. எப்படிய்யா இந்த பெண்ணோட வாழப் போற…!

     திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

     திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. ஆனால் இங்கே ஒரு திருமண வீட்டில் நடந்த சம்பவம் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆனதுடன், கல்யாண மாப்பிள்ளையையும் ரொம்பவே வேதனைப்படுத்தி விட்டது.

  அப்படி என்னதான் நடந்தது எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். உத்திரப்பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பரஸ்பரம் பொண்ணும், மாப்பிள்ளையும் மாலை மாற்றக் காத்திருந்தனர். அப்போது மாப்பிள்ளை எதிர்பார்க்காத நேரத்தில் மணப்பெண், மாப்பிள்ளை கன்னத்தில் இருமுறை பளார், பளார் என அறைந்தார். தொடர்ந்து ஏதோ சட்டசபையில் இருந்து வெளியேறும் எதிர்கட்சியைப் போல மணமேடையில் இருந்து வெளியேறிவிட்டார்.

   பின்பு உறவுகள் சேர்ந்து என்னவெல்லாமோ சமரசம் செய்தும் சமாதானம் ஆகவில்லை. கடைசியில், போலீஸார் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் திருமணம் செய்துவைத்தனர். மணமேடையில், சொந்தபந்தங்கள் முன்பே பளார் என அறைவிட்ட பெண்ணோடு எப்படி வாழப் போகிறாய்? என நெட்டிசன்கள் பரிதாபம் தெரிவித்துவருகின்றனர். 

https://youtube.com/watch?v=vJzT_zcEZoY