குழந்தை போல் ஓடி வந்து போலீஸ் நண்பரின் கையில் இருந்த உணவை உண்ட மயில்… இணையத்தில் பரவும் வீடியோ..!

மயிலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தோகை விரித்து மயில் ஆடுவதைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கும். அதிலும் மழை நேரங்களில் மயில் தோகை விரித்து ஆடுவதே மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

இந்தியாவின் தேசிய பறவையாகவும் மயிலே இருக்கிறது. பொதுவாகவே நாம் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தான் உரியது என நினைத்துக் கொள்கிறோம். ஆனால் பாசம், பிரிவு, இணையை பிரிவதில் உள்ள துயரம் ஆகியவை பறவை, விலங்குகளுக்கும் உண்டு. அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காவல்நிலையத்தில் உள்ள காவலர் ஒருவர் கையில் உணவை வைத்து அன்பாக மயில் முன் காண்பிக்கின்றார். அதனைக் கண்ட மயிலானது மெதுவாக வந்து அதனை உண்கின்றது.இதில் மயிலின் அன்பையும் அந்த காவலரின் அன்பையும் வெளிப்படுத்துகிறது, காண்பதற்கு கண் கொள்ளா கட்சியாக இருக்கிறது. இந்த காணொளி ஆனது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது நீங்களே பாருங்க அந்த காணொளியை வீடியோ இணைப்பு கீழே…