நாய்க்கு மசாஜ் செய்து தூங்க வைக்கும் பூனை… என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி பாருங்க..!

       பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தை  பூனைகள் பிடிக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். பூனைகள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கே ஒரு பூனையின் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த பூனை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

 பொதுவாகவே நாய்கள் வீட்டைப் பாதுகாப்பதில் தொடங்கி, எஜமானர்களிடம் விஸ்வாசம் காட்டுவதுவரை அசத்தும். பூனை காவல் காக்காதே தவிர, வீட்டில் இருப்பவர்களிடம் ,மிகவும் பிரியமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் வீட்டில் இருப்போரின் காலை செல்லமாக முட்டிக் கொண்டே மியாவ்..மியாவ் என கத்துவது பார்க்கவே அழகாக இருக்கும்.

  இங்கேயும் அப்படித்தான் ஒருவர் தன் வீட்டில் பூனையும், நாயும் சேர்த்து வளர்த்து வந்தார். பொதுவாக பூனை, நாயைப் பார்த்தால் பயந்து ஓடுவது தான் வழக்கம். ஆனால் இங்கே இரண்டுமே சேர்ந்தே வளர்ந்ததால் அவைகளுக்குள் இணக்கம் ஆகிவிட்டது. அந்தவகையில் நாய் படுத்ததும், பூனை அதற்கு மசாஜ் செய்து தூங்க வைக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.