நடிகர் யோகிபாபுவின் அண்ணன் இவர்தான்… என்ன வேலை செய்கிறார் தெரியுமா..? இப்படி ஒரு வேலையா..

      செந்தில்_கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், புரோட்டா சூரி என தமிழ்த்திரையுலகில் காமெடியில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவர் கோலோச்சுவர். அந்த வகையில் இது யோகி பாபுவின் காலம்!

      யாமிருக்க பயமேன் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்னும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னர் வெளியாகும் படங்களில் எல்லாம் திரையரங்கில் அவர் முகம் தெரிந்தாலே, ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்விடுகின்றனர்.

     இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. அண்மையில் அஜித் நடிப்பில் சக்கைப்போடு போட்ட விஸ்வாசத்திலும் யோகி பாபு நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் அவரது நடிப்பில் 20 படங்கள் வந்தன. ஒருபக்கம் பக்காவான நகைச்சுவை ரோலில் நடிக்கும் யோகிபாபு, மற்றொருபுறம் பரியேறும் பெருமாள் போன்ற கலை, சமூக அக்கறை தாங்கிய படத்திலும் நாயகனுடன் படம் முழுவதும் ஜார்னி செய்திருப்பார். சமீபகாலமாக பல படங்களிலும் ஹீரோவாகவும் நடித்துவருகிறார் யோகி பாபு. 

  அச்சு, அசப்பில் யோகிபாபு போலவே இருக்கும் அவரது அண்ணன் கோவில் ஒன்றில் பூசாரியாக வேலை செய்கிறார்.அவரது பெயர் சக்தி யோகி ராஜா. ஆரம்பத்தில் டிராவல்ஸ் நடித்திவந்த இவர் இருபது வருடங்களாக கோயில் பூசாரியாக இருக்கிறார். அவர் அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். 

அதில் எங்கள் தாத்தா காலத்தில், ‘சொந்தமாக நாடகக் கம்பெனிகூட இருந்தது. ஆனால் எனக்கு சின்னவயதில் இருந்தே ஆன்மீகம் தான் பிடிக்கும். தனி மனிதனால் எதுவும் சாதிக்க முடியாது. அம்பாள் சாதிப்பாள். நான் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன். எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இல்லை. கோயில் பூசாரியாக நிறைவாக இருக்கிறேன்.’’என்றார்.