பறவையும் ஒரு சிறு குழந்தை போலத்தான்.. குழந்தையைப் போல் மாறி எப்படி தவழ்ந்து மடியில் ஏறி கொஞ்சி விளையாடுதுனு பாருங்க..!

பறவை ஒன்று குழந்தையைப் போல் மாறி பாசம் காட்டும் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

பறவைகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளவும், ஆச்சர்யப்படவும் நிறைய விசயங்கள் இருக்கின்றன. பறவைகள் மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகம் இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்ததாக இருந்திருக்காது. எப்படி என்கிறீர்களா? காகம் தொடங்கி சகல பறவைகளும் சாப்பிட்டுவிட்டு எச்சம் போடுகிறது அல்லவா? பறவைகள் வெறுமனே நாம் வைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிடுவது இல்லை.

அவை மரங்களில் பழங்களையும் சாப்பிடும். அவை எச்சம் போடும் போது அந்த பறவைகளின் எச்சத்தில் விதைகளும் இருக்கும். அதன் மூலம் மரம், செடி கொடிகள் வளர்ந்து இந்த உலகம் இயற்கை சமநிலை அடைய பறவைகளும் காரணம் ஆகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டைக் கட்டிக்கொள்ள பெரிய, பெரிய சிவில் இஞ்சினியர்களை அழைத்து வருவார்கள். மாதக்கணக்கில் பத்து, பதினைந்து பேர் வேலை செய்துதான் ஒரு வீடு உயிர் பெறுகிறது. ஆனால் பறவைகள் தனித்தே தங்கள் வீட்டை அதாங்க கூட்டை அழகாக வடிவமைத்துவிடும். அதிலும், பெரிய, பெரிய இஞ்சினியர்களே நினைத்தால் அப்படி கட்ட முடியாத அளவுக்கு மிக நுட்பமாக தங்கள் கூட்டை வடிவமைத்துக்கொள்ளும் பறவைகளும் இருக்கின்றன.

அதேபோல் வீட்டில் செல்லப்பிராணிகளாகவும் பறவைகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. அந்தவகையில், இங்கேயும் ஒருவர் தன் வீட்டில் ரொம்பவும் பாசமாக பறவைகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பறவை அவரது குழந்தையைப் போலவே மாறிவிட்டது. அவர் மீது அதீத அன்பையும் பொழிகிறது. தாய், சேய் போல பறவையும், அந்த மனிதரும் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.