இந்த மாதிரி டீச்சர் கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்… ஏன்னு தெரியுமா? இதோ இந்தக் காட்சியைப் பாருங்க…

  அடுத்தத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளே ஆசிரியர்கள் தான். அதனால் தான் ஆசிரியரிடம் அடி வாங்கும் மாணவர்கள் பிற்காலத்தில் சமூகத்தில் மதிக்கப்படும் இடத்திற்கு வருவார்கள் எனச் சொல்கிறார்கள். அந்தவகையில் இங்கே ஒரு ஆசிரியை செய்த செயல் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. அப்படி அந்த ஆசிரியை என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

    பொதுவாக ஆசிரியைகள் என்றாலே நாம் கண்டிப்பானவர்கள் என்றே நினைக்கிறோம். ஆனால் கண்டிப்புடன் கூடிய அன்புடன் பாடம் எடுக்கும் ஆசிரியைகள் பலர் உண்டு. அந்தவகையில் இங்கேயும் ஒரு ஆசிரியை இருக்கிறார். தன் பள்ளியில் பயிலும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிக் குழந்தையை அவர் தன் குழந்தை போல பார்த்துக் கொள்கிறார். அந்தக் குழந்தைக்கு மதிய நேரங்களில் தாயாகவே மாறி ஊட்டிவிடுகிறார். 

இதேபோல் இங்கே சில மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை அவர்களது பெற்றோர் கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும் காட்சி இணையத்தில் செம உருக்கத்தை வரவைத்துள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.