திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு செல்லும் மணப்பெண்கள்… குடும்பத்தை பிரித்து செல்வதை நினைத்து கலங்கும் காட்சி..!

        திருமணம் முடிந்துவிட்டால் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் தங்கள் புகுந்த வீட்டைப் பிரிந்து செல்வதன் துயரம் பெண்களுக்கு மட்டுமே உணரமுடியும்.

    அதிலும் பிறந்தவீட்டில் அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

                              அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதில் அண்ணன், தங்கை பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இதேபோல் பெண்கள் தங்களின் அப்பாக்களின் மேல் வைக்கும் பாசத்திற்கும் ஈடே கிடையாது. புகுந்த வீட்டில் என்னதான் வசதிவாய்ப்புகள் இருந்தாலும், பெண் வீட்டில் இருக்கும் சுதந்திரமும், மன திருப்தியும் பெண்கள் அங்கு உணர்வதில்லை. 

   அதனால் தான் மணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் மணப்பெண்கள், தன் தாய்வீட்டை  பிரிய முடியாமல் ஓவென்று அழுகின்றனர். இதோ நீங்களே இதில் பாருங்களேன்.புகுந்த வீட்டுக்கு செல்லும் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மணப்பெண்கள் கதறியழும் காட்சி இதோ…