வாய் என்னவாகும்? இப்படியெல்லாம் கூடவா போட்டி நடந்துவாங்க? இப்படி ஒரு போட்டி வாழ்க்கையிலேயே பார்த்திருக்க மாட்டீங்க…!

   ’சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா’ என வரும் சினிமா பாடலைப் போல் ஒவ்வொருவருக்கும் அவர், அவர் கிராமம் சொர்க்கம் தான். அதிலும் விசேச காலங்களில் கிராமத்தில் இருப்பதே வரம் என்று சொல்லிவிடலாம். அவர்கள்தான் வித்தியாச வித்தியாசமான போட்டிகளிலும் அசத்துவார்கள். 

         ‘விளையாட்டு’ தான் நம்மை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாரதியாரே கவிதை எழுதினார். ஆனால் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.

  மனம் இலகித்து விளையாடும் போது அதன் மூலம் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமக்குள் மேலாங்கும். ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனே கதி என நினைக்கிறார்கள். அவர்களின் விளையாட்டும் கூட செல்போனுக்குள் சுருங்கிப் போய்விட்டது. 

  ஆனால் இன்றும் கிராமப் பகுதிகளில் பொங்கல் விழாக்களில் சுவாரஸ்யமான விளையாட்டுகள் நடந்து வருகிறது. மியூசிக் சேர் சுற்றுவது தொடங்கி பாட்டுப் போட்டிகள் வரை சரளமாக எல்லா ஊரிலும் நடப்பது தான். ஆனால் இந்த கிராமத்தில் ஆண்கள் சேர்ந்து நடத்திய ஒரு போட்டி சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது.

  அப்படி என்ன போட்டி நடந்தது என்கிறீர்களா? வடலிவிளை என்னும் கிராமத்தில் தான் இந்தப் போட்டி நடந்துள்ளது. இந்த ஊரில் உள்ள ஆண்கள் பலரும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள். ஒரு இடத்தில் தேங்காய், உரிக்கப்படாமல் வைக்கப்பட்டிருகும். வழக்கமாக தேங்காயை உறிக்க தனியாக ஆயுதம் இருக்கும். அதைத்தான் பலரும் பயன்படுத்துவார்கள். இங்கே போட்டியே வெறும் வாயால் பல்லை வைத்து தேங்காயை உரிக்க வேண்டும். இதோ இந்த கிராமத்து ஆண்கள்  அதையும் எவ்வளவு ஸ்பீடாக உரிக்கிறார்கள். இதோ நீங்களே பாருங்களேன்.