உலகத்தில் தாயை விட மிகப்பெரிய சக்தி எதுவும் இல்லை… மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த குஞ்சுகள்… பதறிப்போய் தாய் அணில் செஞ்சதை பாருங்க..!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!

மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அதை அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இங்கேயும் அப்படித்தான். மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த அணில் குட்டி போட்டிருந்தது. அதில் இரு குட்டிகள் மரத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தன. இதைப் பார்த்த அடுத்த நொடியில் தாய் அணிலானது மரத்தில் இருந்து விறு, விறுவென இறங்கிவந்தது. கண் இமைக்கும் நொடியில் அந்த அணில் தன் குட்டியின் உடல் முழுவதும் தடவிக்கொண்டு அதன் காலை வாயில் கவ்விக்கொண்டு மேலே ஏறிச் செல்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். பாசம் அனைவருக்குமானது. அதிலும் இந்த அணிலின் தாய்ப்பாசம் நம்மை சிலாகிக்க வைக்கிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.