அம்மாட்ட காசு இருந்ததான் வாங்கிதற சொல்லுவேன்.. இந்த குட்டிக்குழந்தையின் மனசைப் பாருங்க… சிலிர்த்துப் போவீங்க..!

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். வளரிளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையையும், அவர்களின் ரசனையையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். 

 ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

 இங்கேயும் ஒரு குட்டிப் பாப்பா இருக்கிறது. அது செம க்யூட்டாகப் பேசுகிறது. அம்மாவிடம் பணம் இருந்தால் எனக்கு பசிக்கிறது எனக் கேட்டு வாங்கி சாப்பிடுவேன். அம்மாவிடம் பணம் இல்லாவிட்டால் வெளியில் போயிருக்கும் போது எனக்கு பசி இல்லை என சொல்லிவிடுவேன் என தன் மழலை மொழி மாறாமல் செம க்யூட்டாகப் பேசுகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.