பள்ளி விழாவில் பியானோ வாசித்து அசத்திய குட்டி தேவதை.. இசையை கேட்டு பாருங்க நெகிழ்ந்து போவீர்கள்..!

                  இசைக்கு மயங்காதவர் யாருமே இல்லை எனச் சொல்லிவிடலாம். இசையை ரசிக்காதவர்களும் யாருமே இருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன் படம் எடுத்து ஆடும் நல்ல பாம்பு கூட மகுடி இசைக்கு பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவதைப் பார்த்திருப்போம். அந்தவகையில் மனித வாழ்வோடும் இசை இரண்டறக் கலந்த ஒன்றுதான்!

               இன்றும், நல்ல இசையுடன் கூடிய பாடலோடு தூங்கச் செல்பவர்களே அதிகம். அந்த அளவுக்கு இசைக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பொதுவாகவே இசையைப் பொறுத்தவரை அது மேற்கத்திய இசையோ, நம் பாரம்பர்ய இசையோ அதற்கான கருவிகள் நம்மோடு பரிச்சயம் ஆகியிருக்கும். அதிலும் இதுபோன்ற இசைக்கருவிகளை குழந்தைகள் இசைக்கும்போது அதில்வரும் சுவாரஸ்யமே அலாதியானது.

  அந்தவகையில் இங்கேயும் ஒருகுட்டிக் குழந்தை தன் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பியானோ வாசிக்கிறது. ப்ரியதர்ஷினி என்னும் அந்தக் குட்டிக்குழந்தை தேசப்பற்றைத் தூண்டும் வகையில் பாடல் ஒன்றை பியானோவில் வாசித்து அசத்த மொத்தக் கூட்டமும் கண் இமைக்காமல் அதைப் பார்த்து ரசித்தனர். இணையத்தில் குறித்த அந்த வீடியோவை பத்துகோடிக்கும் அதிகமான நபர்கள் பார்த்துள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.