முகூர்த்த நேரத்தில் நேரத்தில் சிறுவர்கள் செய்த செயல்… கடுப்பாகி இந்த அர்ச்சகர் செய்ததை பாருங்க.. விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!

கல்யாண வீட்டில் திருமண வீட்டில் மாபிள்ளையும், பொண்ணும் பதட்டத்தில் இருப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் திருமணத்தை செய்துவைக்கும் அர்ச்சகரே பதட்டமாகிவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அதுதான் இங்கே நடந்தது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும்.

ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் மாப்பிள்ளை பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது. ஆனால் இந்த திருமணத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அதெல்லாம் இல்லாத குறையை கல்யாணம் செய்துவைக்க வந்த புரோகிதர் தீர்த்துவிட்டார். எப்படி எனக் கேட்கிறீர்களா? மணப்பெண்ணின் கழுத்தில் அர்ச்சகர் எடுத்துக் கொடுத்த தாலியை மாப்பிள்ளை கட்டிக் கொண்டு இருந்தார். அப்போது, மணமேடையை சுற்றிநின்றுகொண்டிருந்த இருசிறுவர்கள் தங்கள் கையில் இருந்த அச்சதை தூவும் அரிசியை அய்யர் மீது செம ஸ்பீடாக எரிந்தனர். இதைப் பார்த்து டென்ஷன் ஆகிப்போன அர்ச்சகர் தாம்பூலத் தட்டால் அந்த பொடியர்களை கோபமாக அடித்தார். மாப்பிள்ளை தாலிக் கட்டிக்கொண்டிருக்க அர்ச்சகர் டென்ஷனில் அடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.