இந்த பொண்ணு எது மேல உட்கார்ந்திருக்குன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… அடேங்கப்பா என்ன ஒரு அதிசயம் பாருங்க…

   இந்த உலகம் பல ஆச்சர்யங்களும், அதிசயங்களும் நிரம்பியதுதான். இங்கே நமக்குத் தெரிந்தவைகள் ரொம்பவே குறைவுதான். ஆனால் நம்மை அறியாமல் பல அதிசயங்கள் இங்கே கொட்டிக் கிடக்கிறது. அதையெல்லாம் பார்த்தால் நாம் மிரண்டே விடுவோம்.

   இன்று இணையப் பயன்பாட்டின் வேகத்தால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் ஆச்சர்யத்தை நாம் உணரமுடிகிறது. உடனுக்குடன் அந்த அதிசயங்கள் குறித்தும் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்தவகையில் ஆந்திர மாநிலத்திலும் ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஆந்திராவின் கடப்பா பகுதியில் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு பெரிய தொட்டி போன்று அமைக்கப்பட்டுள்ளது.

  அதில் விக்டோரியா என்னும் ஒரு வகை செடியை வளர்க்கிறார்கள். இந்த செடியின் இலைகள் தண்ணீருக்கு மேல் தாமரை இலையைப் போல் பரவி உள்ளது. தாமரை இலை எப்படி நீருக்குள் மூழ்காமல் இருக்குமோ, அதேபோல் இந்த விக்டோரியா இலையும் தண்ணீரில் மூழ்காமல் உள்ளது. இதன் மேல் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் செம கூலாக ஏறி அமர்ந்துள்ளார்.

அந்த மாணவி 39 கிலோ எடை கொண்டவர். ஆனால் அவர் செம கூலாக ஏறி அமர்ந்துகொள்ளும் அளவுக்கு அந்த விக்டோரியா இலை தாங்குகிறது. இந்தக் காட்சி இணையத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோ நீங்களே பாருங்களேன்.