இந்த பிஞ்சுக் குழந்தைக்கு இருக்கும் தேசப்பற்றைப் பாருங்க… ராணுவ வீரரை பார்த்ததும் செய்த செயல்…

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத் துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.

 வளரிளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையையும், அவர்களின் ரசனையையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.  ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

 இங்கேயும் ஒரு குட்டிப் பாப்பா இருக்கிறது.அந்தக் குழந்தை தன் அம்மா, அப்பாவோடு ரயில்வே ஸ்டேசனுக்கு ரயில் ஏற வந்திருந்தது. அப்போது அங்கு ராணுவ வீரர்கள் நிறையபேர் நின்று கொண்டிருந்தனர். ராணுவ வீரரைப் பார்த்ததும், அந்தக் குழந்தை மிகவும் உற்சாகமாகி விடுகிறது. தன் பெற்றோரை விட்டு நேரே அந்தக் குழந்தை ராணுவ வீரர்களை நோக்கிச் செல்கிறது. அதில் ஒரு ராணுவ வீரரின் காலைத் தொட்டுக் கும்பிட்ட அந்தக் குழந்தை, தன் மழலைத் தன்மையோடு சல்யூட் அடிக்கவும் செய்தது.

     இந்த பிஞ்சு வயசுல இந்தக் குழந்தைக்கு இவ்வளவுப் பெரிய தேசப்பற்றா என நெட்டிசன்கள் சிலிர்த்து பதிவிட்டு வருகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள். நீங்களும் இந்தக் குழந்தையின் தேசப்பற்றில் சிலிர்த்துப்  போவீர்கள்.