எங்களுக்கும் நெஞ்சுல ஈரம் இருக்குங்க என நிரூபித்த காகம்… நடுரோட்டில் பரிதவித்து நின்ற எறும்புதீனியை ரோட்டில் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்த காகம்..!

இந்த காலத்தில் மனிதர்களே அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்கு யோசிப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் நாம் சிக்கலில் மாட்டிவிடுவோமா என்ற அச்சத்தில் உதவி செய்வதற்கு யோசிப்பார்கள்.

இங்கு நாம் பார்த்து கொண்டிருக்கும் வீடியோவில் உள்ள காகம் ஒரு முள்ளம் பன்றிக்கு உதவி செய்யும் வீடியோ இணையதளத்தில் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்து மிகவும் வேகமாக பரவி வருகிறது. முள்ளம் பன்றியானது நடு ரோட்டில் போக முடியாமல் தடுமாறிக் கொண்டு நின்றது.

அதை பார்த்த காகம், முள்ளம்பன்றிக்கு அடி ஏதும் படாமலும், அதனுடைய முட்கள் தன் மேல் படாமலும் புத்திசாலித்தனமாக தன்னுடைய அலகால், நடுரோட்டில் நின்ற முள்ளம் பன்றியை பத்திரமாக சாலையோரம் கொண்டு போய் விட்டுள்ளது.

இந்த உலகில் மனிதர்களில் நல்லவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ இந்த வாய் பேசாத உயிரினங்கள் மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு அன்பாகவே இருக்கின்றன. அதனாலும் உலகத்தில் மழை பொழியும் அல்லவா….