ஜாலியாக உட்கார நாற்காலில் மல்லுக்கட்டிய குட்டி சூனா பானா.. கடைசியில் குட்டி சூனா பானாக்கு நடந்த சோதனையை பாருங்க..!

அழகு, குட்டி, செல்லம். மயிலு, ராஜா, கண்ணு என்ற வார்த்தைகளின் மூலம் குழந்தைகளை கொஞ்சுவோம். குழந்தைகள் சிறு சிறு சேட்டைகள் செய்து கொண்டு தங்களுக்கு பிடித்த பொருட்களின் மேல் அதிக விருப்பம் கொண்டு அவற்றை தமது கைகளிலேயே தூக்கிக் கொண்டு செல்வார்கள். தூங்கும் போதும் உடன் வைத்து கொள்வது வழக்கம்.குழந்தைகள் தங்கள் பொருட்களின் மேல் அதீத பாசம் கொண்டாலும் ஒரு சில நேரங்களில் அதனிடமும் செல்ல கோபம் கொள்வார்கள்.

சில குழந்தைகள் கோபம் கொண்டாலும் நம்மை சிரிப்பில் ஆழ்த்தும். வயிறு வலிக்க சிரிக்க வைக்க குழந்தைகளால் மட்டுமே முடியும்.

நடந்தாலும், ஓடினாலும், பேசினாலும். பாடினாலும், சேட்டைகள் செய்தாலும், கோபம் கொண்டாலும் இந்த உலகில் அழகாக தோன்றும் உயிர் என்றால் நம் குழந்தைகள். இங்கே ஒரு சுட்டி சிறுவன் நாற்காலியை ஒரு இடத்தில் வைத்து கொண்டு அமர முயல்கிறார், ஆனால் அவரால் அந்த நாற்காலியின் மேல் உட்கார முடியவில்லை.

சரி இங்கே தான் உட்கார முடியல அந்த பக்கம் போட்டு உட்காரலாம் என்று முயற்சி செய்து பார்க்கிறார், ஆனால் அவரால் சரியாக நாற்காலியின் மேல் உட்கார முடியவில்லை. என்ன தான் நம்ம சுட்டி பையன் மிகுந்த எச்சரிக்கையோடு அமர முயற்சித்தாலும் நாற்காலியின் மேல் உட்கார முடியாமல் அவர் படும் பாடு இறுதியில் கோபத்தின் உச்சிக்கே சென்று அதனை….நீ போ… நீயெல்லாம் சரிவர மாட்டே என்று கோபத்தில் அந்த நாற்காலியை விட்டு எறிகிறார். அந்த காணொலி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த காணொலியை இங்கே காணலாம்…….