கையில் குழந்தையை வைத்துக்கொண்டு விமானத்தில் இளம்பெண் செய்த செயல்… மிரண்டு போன விமானப் பணிப்பெண்…!

   இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது. இங்கேயும் ஒரு பெண்ணின் திறமை அனைவரையும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. அப்படி, என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

   இன்றைய பெண்கள் மிகவும் தைரியமானவர்கள். முந்தைய காலப் பெண்களுக்கு அது இல்லை. இவ்வளவு ஏன் 2000வது ஆண்டுக்கு பின்புதான் பெண்கள் மிகப்பெரிய தைரியத்துடன் வெளிப்பட்டு வருகின்றனர். அதிலும் பெண் பருவ வயதை அடைந்துவிட்டாலே அவளை வீட்டுக்குள் சுருக்கிவிடும் கலாச்சாரம் இன்றும்கூட கிராமப் பகுதிகளில் இருக்கிறது. 

  ஆனால் சில பெண்கள் அந்த எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு மிகவும் துணிச்சலாக இருப்பார்கள். இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

    அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். கடினமான உடல் உழைப்பிலும் ஆண்களுக்கு இணையாக களத்தில் இருந்து மிளிர்கின்றனர். 

                  கனரக வாகனங்களையும் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண் விமானத்தில் தன் கைக்குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். விமானம் நின்றதும் தன் கைக்குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டே, இன்னொரு கையால் விமானத்தில் சீட்டிற்கு மேலே இருந்த கேபினில் இருந்து தன் பெட்டியை எடுத்தார். தொடர்ந்து அவர் செய்தது தான் ஆச்சர்யத்தையும், அந்த பெண்ணின் திறமையையும் ஒருசேரக் காட்டிக் கொடுத்துள்ளது. 

  அந்தப் பெண், தன் கையில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டே, தன் காலை தன் தலையை விட உயரமான இடத்தில் இருக்கும் கேபின் வரைத் தூக்கி பெட்டியை எடுத்த கேபினை காலாலேயே அடைக்கிறார். வாவ்…என இதைப் பார்த்த விமானப் பணிப்பெண்ணே ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.