இந்த காகாத்தோட அறிவைப் பாருங்க.. காலத்துக்கு ஏத்த மாதிரி காகம் கூட மாறிடுச்சு..!

பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.

அதேபோல் இப்போது ஒரு காகம் செம புத்திசாலித்தனத்துடன் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி காகம் என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். அந்த கதையைப் போல் இப்போது வீட்டில் மண்பானை வைத்து தண்ணீர் குடிக்கும் இல்லங்கள் அதிகமாக இல்லை.

இங்கேயும் ஒரு காகத்திற்கு பயங்கரமாகத் தண்ணீர் தாகம் எடுக்கிறது. அந்த காகம் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் பைப்பை அதுவே தன் அலகுகளால் திறந்து அழகாகத் தண்ணீர் குடித்துவிட்டு பறக்கிறது. காகத்தின் இந்த புத்திசாலித்தனத்தை ஒருவர் வீடியோவாக எடுத்துப் பதிவிட அது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.