வீரத் தமிழச்சிகளின் வியக்கவைக்கும் திறமை.. கல்லூரி விழாவில் செம கெத்தாக சிலம்பம் சுற்றிய அழகுதேவதைகள்..!

                    இன்றையக் காலச்சூழலில்  தற்காப்பு கலை என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.  அதிலும் பெண் குழந்தைகள் இன்றைய காலத்தில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அதனால் அவர்களுக்கு தற்காப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனாலேயே பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கின்றனர்.

   என்ன தான் கராத்தே, குங்க்பூ என கற்றுக்கொடுத்தாலும் நம் பாரம்பர்யக் கலைகளுக்கு இருக்கும் மவுசே தனிதான். அதிலும் சிலம்பம் உள்ளிட்ட பாரம்பர்யக் கலைகள் எப்போதும் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியூட்டுபவை. அந்தவகையில் நாமெல்லாம் மறந்துபோன நம் பாரம்பர்ய சிறப்புமிக்க சிலம்புக்கலையும் இன்று அழிந்து வருகிறது.

  இந்நிலையில் தான் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இரு மாணவிகள் நம்பாரம்பர்ய உடையான சேலையைக் கட்டி செம மாஸாக சிலம்பம் சுற்றுகின்றனர். செம மாஸாக இவர்கள் சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.