தன் பாகன் மேல் இந்த யானைக்கு இருக்கும் பாசத்தைப் பாருங்க… போட்டோ எடுக்க வந்து அசந்து போன நபர்…!

             மனிதர்களை விட மென்மையும், பாசமும் கொண்டவை மிருகங்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

    பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

   ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும். 

   இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு யானை தன் பாகனிடம் அளவுகடந்த பாசமும், சினேகமும் வைத்துள்ளது. அவர் சொல்வது போல் எல்லாம் அது கேட்கவும், அவருக்கு சமமாக தன் உடலைத் தாழ்த்தி அவரிடம் உரையாடலும் செய்கிறது. கேரளத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.