ஒரு ஜாண் வயிற்றுக்காக சைக்கிளை வைச்சு என்ன சாகசமெல்லாம் காட்டுறார் பாருங்க…!

       திறமை என்பது  வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான்.  ஒரு சாமானிய நபரின்  திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

  வட இந்தியாவில் தான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. சாலையோரத்தில் கூடாரம் கட்டி வட்டத்திற்குள்ளேயே சைக்கிள் ஓட்டும் போட்டியெல்லாம் முன்பு நம் தமிழகத்தில் கூட வழக்கத்தில் இருந்தது. ஆனால் இப்போது அந்த போட்டியெல்லாம் இல்லை. சினிமா, யூடியூப், கேம்ஸ், வேறு, வேற் பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டதால் இன்று நம் தமிழகத்தில் சைக்கிள் சுற்றுவதெல்லாம் இல்லாமல் போய்விட்டது.

  இங்கே வட இந்தியாவில் ஒரு நபர் சைக்கிளை வைத்து செம வித்தைக் காட்டுகிறார். சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தாமலேயே, அதன் மேல் கால் மேல் கால் போட்டுக்கொண்டே செம தோரணையாக டீ குடிப்பது தொடங்கி, சைக்கிளை தன் பல்லாலேயே தூக்குவதுவரை வித, விதமாக வித்தை காட்டுகிறார். இதோ நீங்களே இந்த நபரின் திறமையைப் பாருங்கள். வைரலாகும் வீடியோ இதோ!…