என் கூட வா 2000 ரூபாய் சம்பளம் தாரேன்.. கடைக்காரரைத் தெறிக்கவிட்ட பிச்சைக்காரர்! வைரலாகும் காட்சி..!

 பிச்சைக்காரர்களை பார்த்ததுமே சிலர் தன் பாக்கெட்டில் இருக்கும் சில்லறைகளை அள்ளி எரிந்துவிடுவார்கள். ஆனால் வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகள் யாசகம் கேட்டால்  கொடுக்கலாம். தப்பில்லை தான். ஆனால், சிலநேரங்களில் கை, கால் சரியாக இருப்பார்களும் அப்படி பிச்சயெடுப்பதுதான் வினோதம்!

             அதிலும் பஸ் ஸ்டாண்ட்களில் பிச்சையெடுப்போர் பலரும் அந்தக் காசில் குடித்தே தீர்த்துவிடுவார்கள். இதனாலேயே பலரும் உஷாராக அவர்களுக்குக் காசுப் போடுவதில்லை. ஆனால் சிலரோ இதையெல்லாம் உணராமல் பணம் போட்டுவிடுகிறார்கள். இதோ இங்கேயும் அப்படித்தான். ஒருவர் கடையில் இருந்தார். அப்போது அங்குவந்த பிச்சையெடுக்கும் இளைஞர் ஒருவர் பிச்சை கேட்டார். உடனே அந்த கடைக்காரர், உங்களுக்கு கை, கால் எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது. வேண்டுமானால் என் கடைக்கு வேலைக்கு வாருங்களேன் எனச் சொன்னார். இதைக் கேட்டதும், அந்த பிச்சைக்காரர் எவ்வளவு சம்பளம் தருவீர்கள் எனக் கேட்டார்.

  உடனே கடைக்காரர் தினமும் 400 ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னார். உடனே அந்த பிச்சைக்காரர், என்னோடு நீங்களும் பிச்சையெடுக்க வாருங்கள். ஒரு நாளைக்கு 2000 ரூபாய் தருகிறேன் என சொன்னார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.