யாருடா எனக்கு கேட் போட்டது..? எகிறி குதித்த குட்டிக்குழந்தை.. வளர்ந்து பெரிய வீராங்கணையாக வரும் போலருக்கே..!

      ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

          குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். வளரிளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையையும், அவர்களின் ரசனையையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். 

 ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும். இங்கேயும் அப்படித்தான் ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

  அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். இப்போதுதான் மெல்ல, மெல்ல நடக்கத் தொடங்கியிருக்கும் அந்தக் குழந்தை வீட்டை விட்டு எங்காவது சென்றுவிடக் கூடாது என கதவு அருகே குட்டியாக பலகையில் அடித்து ஒரு குட்டிக்கதவு அமைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த குட்டிக் குழந்தையோ, அந்த கதவை தொங்கிப் பிடித்து ஏறி, செம ஸ்டைலாக குதித்து போகிறது. அடேங்கப்பா…எதிர்காலத்தில் இந்த குட்டிக்குழந்தை பெரிய வீராங்கணையாகவே வரும் போலிருக்கிறதே…இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.