எவண்டா எனக்கு கேட் போட்டது… இதுவே என் அண்ணன் கொம்பனா இருந்திருந்தா நடக்குறதே வேற…!

மனிதர்களால் வளர்க்கப்படும் விலங்குகள் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முன் பின் அறியாதவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பழக்கப்படுத்தி வளர்ப்பார்கள். வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கும், காடுகளில் இருக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடுகள் பல இருக்கும். வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் மனிதர்களிடம் அன்பாக பழகும். காடுகளில் சுதந்திரமாக இருக்கும் விலங்குகளுக்கு மனிதர்களை கண்டால் வினோதமாக செயல்படும். சமீபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த யானை ஓன்று ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தினை உதைத்து தள்ளிவிட்டு சென்றது…என்ன இந்த புல்லெட் பாண்டிக்கே கேட்டா….என்று .

இந்த காணொலியில் இடம் பெற்ற யானை நான் எந்த வம்பு,தும்புக்கும் போறதில்ல…. நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன்…. என்று ரெயில்வே கிராஸிங்கில் அனைத்து வாகனங்களும் காத்து கொண்டிருக்க தடுப்பு வேலியை தாண்டி சென்றது.

யானையின் மனதிற்குள் நானா இருகிறதுனால வேலிய தாண்டி போறேன் இதுவே என் அண்ணன் புல்லெட் பாண்டியோ, கொம்பனோ இருந்திருந்தா எல்லாரும் ஓட வேண்டியது தான் என்று கேலியாக நினைத்திருக்கும்.