கவலைகளை மறந்து பார்ட்டியில் ஜாலியாக ஆடிய நபர்… அடுத்த சில நொடிகளில் நிகழ்ந்த சோகம்…!

விழாக்கள் என்றாலே அங்கு ஆட்டம் பாட்டம் இரண்டுமே கலந்துதான் இருக்கும். சில சமயங்களில் கவலை அளிக்கும் நிகழ்வுகளும் நடக்கும். அந்த வகையில் இந்தியாவிலுள்ள உத்திர பிரதேசம் மாநிலத்தை பரேலில் பிறந்தநாள் விழா ஒன்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிராபாத் என்பவரும் கலந்துகொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில், திடீரென யாரும் எதிர்பார்க்காத விதமாக கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர் ஒருவர் பிராபாத்தை பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அதில் பிராபாத்க்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று தெரியவந்தது.

இதனையடுத்து அந்த இடமே சோகத்தில் மூழ்கியுள்ளது.