ரயிலில் பாட்டுப் பாடி வைரலான பெண்…. அதன் பின் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா..!

பாட்டு என்றாலே அனைவருக்கும் இஷ்டம் தான். பல பேருக்கு இசை தான் மன அமைதியை கொடுக்கிறது என்கிறார்கள். அப்படி நிறைய பேருக்கு பிடித்தமான பாடல்களும் உண்டு. அந்த பாட்டைப் பாடியவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. பாட்டுப் போட்டிகள் பள்ளிகளில் அல்லது திருவிழாக்களில் தான் நடக்கும். ஆனால், தற்பொழுதெல்லாம் தொலைக்காட்சிகளில் பாட்டுக்கு என்று தனி நிகழ்ச்சிகளே ஒளிப்பரப்பப்படுகிறது.அதில் பாடுபவர்களுக்கும் தனி ரசிகர்கள் உண்டு.

ஆனால் சாலை ஓரங்களிலும், தெரு ஓரங்களிலும் பாடுபவர்களின் பாடல்களை அதிகமாக காது கொடுத்து கேட்டிருக்க மாட்டோம். அவர்கள் அவ்வாறு பாடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தான் அவர்களது வாழ்க்கையே நடக்கும். இவர்களுக்கு என்று சரியான வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிது. ஒரு பெண் ரயிலில் தனது பாட்டுத் திறமையின் மூலம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்த வீடியோ இணைய தளத்தில் மிகவும் வைரலானது.

அப்பெண்ணிற்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.அவர்தான் அக்குழந்தைகளின் கல்விச் செலவை தான் பாடும் பாட்டின் மூலம் கிடைக்கும் பணத்தில் பார்த்துக்கொள்கிறார். இவர் பாடிய பாடலின் வீடியோ இணையத்தில் வைரலானது. அதன் மூலம் தற்போது அவருக்கு படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.