உருகவைத்த தாய் நாயின் பாசம்.. நாய் குட்டியை அலேக்காக தூக்கிய குழந்தை.. பதிலுக்கு தாய் நாய் செஞ்சதை பாருங்க..!

நாய் என்பது நன்றியுள்ள ஜீவன். நாய்கள் எப்போதுமே எஜமானர்களின் மிக நெருக்கமாக பழகிவிடும். இதனாலேயே பலரும் தங்கள் வீட்டில் ப்ரியத்துடன் நாய் வளர்க்கின்றனர். அந்தவகையில் தன் வீட்டில் குட்டிபோட்ட நாய் ஒன்றின் குட்டியை உரிமையாளரின் மகன் தூக்க முயல பதிலுக்கு நாய் செய்த செயல் வேற லெவல் என்றே சொல்லலாம்.

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கும் அப்படித்தான் ஒரு நாய் நான்கு குட்டிகளைப் போட்டு இருந்தது. அந்த குட்டிகளை அது தன் கண்காணிப்பில் வைத்திருந்தது. அந்த வீட்டில் இருந்த சின்னக்குழந்தை ஒன்று நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டுவர அந்த சிறுவனின் கையில் இருந்து தன் குட்டியை மீண்டும் வாயால் கவ்வி பிடுங்கிக் கொண்டு போகிறது தாய் நாய். இதனால் அழுதுகொண்டே குழந்தை மீண்டும், மீண்டும் அதைச் செய்ய பதிலுக்கு தாய் நாயும் குட்டியை கவ்வி, கவ்வி அழைத்துப் போகிறது.

அதேபோல், இந்த காணொலியைப் பார்த்தவர்களில் பலரும் நாய் பழகியதுதான் என்றாலும், குழந்தைகள் இப்படி செய்வதை ரசித்து வீடியோ எடுப்பது ஆபத்தானது எனவும், குழந்தையை தாய் பாசத்தில் நாய் கடித்து இருந்தால் என்ன ஆகும்? எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். என்னதான் இருந்தாலும் இந்த நாயின் தாய்ப்பாசத்தை பாருங்கள். நீங்களும் உருகிப்போவீர்கள்..