யாருப்பா இந்த குழந்தை… துளியும் பயமின்றி பாம்பை எவ்வளவு அசால்டாக டீல் செய்யுரான்னு பாருங்க…!

பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம். இன்னும் சிலரோ பாம்பை மிகவும் அசால்டாக டீல் செய்வார்கள். ஆனால் இங்கே ஒரு குட்டிகுழந்தை பாம்பை சர்வ சாதரணமாக டீல் செய்கிறது.

  அதிலும் அது மிகவும் பிரமாண்டமான நீள பாம்பு, அதைப் பார்த்தாலே நமக்கு அச்சமூட்டுகிறது. ஆனால் இங்கே ஒரு குட்டிக்குழந்தை சர்வ சாதாரணமாக அந்த பாம்பை வாலைப் பிடித்து தர, தரவென இழுத்துச் செல்கிறது. குட்டிக்குழந்தை பாம்பை மிகவும் தைரியமாக டீல் செய்யும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.