வயல் சேற்றில் வசமாக சிக்கி கொண்ட குட்டி யானை.. காலை இழுத்து உதவி செய்த சிறுமி… பதிலுக்கு நன்றிகடனாக யானை செஞ்சதை பாருங்க நெகிழ்ந்து போவீர்கள்..!

தாய்லாந்த் சிறுமிக்கு குவியும் பாராட்டு…..உதவி செய்தததற்கு நன்றி கூறிய யானை……என்றும் சிறுமியை நினைவில் வைத்திருக்கும் …….என கமெண்ட் செய்த இணையவாசிகள்….

யானைகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும் இயல்புடையது. தாய் யானை குட்டிகளுடன் பிராயணம் செய்யும், குட்டிகளை விட்டு நீங்காது இருக்கும். பெண் யானைகள் கூட்டத்தினை வழிநடத்தி செல்லும். ஒவ்வொரு யானைகள் கூட்டத்திற்கும் வயதான பெண் யானை தலைமை பண்புடன் வழிநடத்தி செல்லும்.

ஆண் யானைகள் 7 வயது முதல் 12 வயது வரை தாயுடன் இருக்கும். பிறகு துணை தேடி வேறு யானை கூட்டத்துடன் நட்பு கொள்ளும். ஒரு யானையானது 50 முதல் 60 வயதுவரை வாழும். பிறந்த குட்டிகள் 20 நிமிடங்களில் எழுந்து நிற்கும், மேலும் ஒரு மணி நேரத்திற்குள் நடக்க ஆரம்பித்துவிடும். 2-நாட்களுக்கு பிறகு யானைக்கூட்டத்துடன் சேர்ந்து இரை தேடி செல்லும். கடந்த நூற்றாண்டுகளில் 50/-மேலாக உலகம் முழுவதிலும் உள்ள யானைகள் மனிதர்களால் அழிக்கப்பட்டுள்ளது. அவற்றின் தந்தத்திற்காக ஆப்பிரிக்க நாடுகளில் வேட்டையாடப்படுகிறது.

சமீபத்தில் தாய்லாந்தில் சிறுமி ஒருவர் யானைக்கு செய்த உதவி உலகம் முழுக்க வைரல் ஆகி வருகிறது. யானை குட்டி ஓன்று கரும்பு தோட்டத்தின் சகதியில் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் மாட்டி கொண்டது. இதனை அவ்வழியாக சென்ற சிறுமி அதனுடைய கால்களை பற்றி இழுத்து வெளியேறுவதற்கு உதவி செய்தார், மேலும் அதனுடைய பின்னங்கால்களையும் இழுத்து உதவி செய்தார் அந்த சிறுமி. இறுதியில் அந்த குட்டி யானை வெளியே வந்ததும் தும்பிக்கையை தூக்கி நன்றி கூறியது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் உலக அளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்…..