யாரும் இப்படி பண்ணாதீங்க… இலங்கையில் மயில் போல் அழகாக நடனமாடிய சிறுமிக்கு ஏற்பட்டுள்ள நிலை…

நடனத்தில் பல வகைகள் உண்டு. அதுவும் ஒவ்வொரு நாட்டிலும் பல வகையாக நடன நிகழ்ச்சி நடக்கும். இலங்கை நாட்டிலுள்ள பாண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி சசாதி தனது நடனத்தால் ஒரே நாளில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார். கதரகாமாத்தில் நடைப்பெற்ற பெரஹேர நிகழ்ச்சியில் நடனமாடி இருக்கிறார். அதுவும் மயில் போன்ற வேடமணிந்து நடனமாடியிருக்கிறார்.

அந்த சிறுமி சசாதியின் நடனம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால், அந்த சிறுமியால் கேட்டகவும், பேசவும் முடியாது, இந்த சிறுமியின் நடனம் இலங்கை மட்டுமில்லாமல் வெளிநாட்டினராலும் கவரப்பட்டுள்ளது. சசாதியின் இயலாமை குறித்து பலரும் தங்களுடைய அனுதாபங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இதனால் மனம் வருந்திய சசாதியின் பெற்றோர்கள் இவ்வாறான பதிவுகளை போட்டு தன்னுடைய மகளின் இயலாமையை யாரும் இழிவுபடுத்த வேண்டாம் என்றும் இணையதளங்களில் பல பதிவுகளில் தங்கள் மகளை பற்றி யாரும் அனுதாபங்களை தெரிவிக்கக் கூடாது எனவும் கேட்டுள்ளனர்.