மேடையில் நடனமாடிய இளம்பெண்.. பதிலுக்கு குட்டி குழந்தை செய்த தரமான செயல்…!

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்.

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான் ஒரு குழந்தை செய்த செயல் பலரையும் வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. இளம்பெண் ஒருவர் ஒரு விழா மேடையில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது மேடையின் முன்வரிசையில் இருந்த மூன்று வயதே ஆன குட்டிக்குழந்தை ஒன்று எழுந்து அதேபோல் பரதநாட்டியத்துக்கு ஸ்டெப் போடத் துவங்கியது.

அதைப்பார்த்த அனைவரின் கவனமும் மேடையில் இருந்து நகர்ந்து, குழந்தையின் பக்கம் திரும்பியது. இதை அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுக்க இந்த குழந்தையின் ஆட்டம் இப்போது வைரலாகிவருகிறது.