மாமியார், மருமகளை வைச்சு இப்படி ஒரு போட்டியா? யாருப்பா இதெல்லாம் கண்டுபிடிக்கிறது? வேற லெவல் பாருங்க…

         ’சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா’ என வரும் சினிமா பாடலைப் போல் ஒவ்வொருவருக்கும் அவர், அவர் சொந்த ஊர் சொர்க்கம் தான். அதிலும் விசேச காலங்களில் சொந்த மண்ணில்  இருப்பதே வரம் என்று சொல்லிவிடலாம். அவர்கள்தான் வித்தியாச வித்தியாசமான போட்டிகளிலும் அசத்துவார்கள். 

            ‘விளையாட்டு’ தான் நம்மை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாரதியாரே கவிதை எழுதினார். ஆனால் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு விளையாட்டின்அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.

  மனம் இலகித்து விளையாடும் போது அதன் மூலம் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமக்குள் மேலாங்கும். ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனே கதி என நினைக்கிறார்கள். அவர்களின் விளையாட்டும் கூட செல்போனுக்குள் சுருங்கிப் போய்விட்டது. 

  ஆனால் இன்றும் கிராமப் பகுதிகளில் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட  விழாக்களில் சுவாரஸ்யமான விளையாட்டுகள் நடந்து வருகிறது. மியூசிக் சேர் சுற்றுவது தொடங்கி பாட்டுப் போட்டிகள் வரை சரளமாக எல்லா ஊரிலும் நடப்பது தான். ஆனால்  வட இந்தியாவில் உள்ள இந்த ஊரில், மாமியார், மருமகள்களுக்கு இடையே  நடத்திய ஒரு போட்டி சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது.

  வழக்கமாக பெண்களுக்கு இடையில் மியூச்சிக்கல் சேர் சுற்றும் போட்டி நடத்துவது சகஜமானதுதான். ஆனால் இங்கே, அதற்கு மாற்றாக ஒரு பலூனை நடுவில் போட்டுவிட்டு மாமியாரையும், மருமகளையும் சுற்ற வைக்கிறார்கள். பாட்டு நிறுத்தப்பட்டதும் யார் முதலில் பலூனை எடுக்கிறார்கள் என சுவாரஸ்யமாகப் போட்டி வைக்கிறார்கள். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.