மனிதனின் செயலால் வீடு மற்றும் உறவுகளை இழந்த பறவைகள்… மீண்டும் நிகழ்ந்த ஒரு சோகம்..!

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் தனக்கே என்று நினைக்கும் மனிதர்களின் இரக்கமற்ற செயலால் தன்னுடைய வீடுகளை இழந்தது மட்டுமல்லாமல் சில பறவைகள் உயிரையும் இழந்தன. இந்த வீடியோ காண்போரின் நெஞ்சங்களை பதற வைப்பதாக உள்ளது.

மனிதர்கள் பறவைகளின் வீட்டை அழிப்பதால்தான் என்னவோ விலங்குகளும் மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு வந்து மனிதர்களை துன்புறுத்துகிறதோ என்னவோ….மரத்தை வெட்டும் போது பல பறவைகள் பறக்கின்றன. சில பறவைகள் செத்தும் விடுகின்றன. மனிதன் மரத்தை மட்டும் வெட்டவில்லை. அதில் உள்ள உயிரினங்களையும் சேர்த்தே அழிக்கிறான்…

கடந்த சில மாதத்திற்கு முன்பு தான் இப்படி ஒரு சோக வீடியோ வெளியாகி இணையவாசிகள் மனதை ரணமாக்கியது. தற்போதும் அப்படி ஒரு சம்பவம் தான் இங்கேயும் நிகழ்ந்துள்ளது.பார்க்கும் போதே மனது கனத்து விடுகின்றது காணொளி இதோ