திருமண முடிந்த கையேடு ஆட்டம் பாட்டம் என மேடையை அதிர வைத்த கேரளா கல்யாண ஜோடி… அதுவும் தமிழ் பாட்டுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!

திருமண நிகழ்ச்சிகளில் ஏதாவது வித்தியாசமாக செய்து அதிர விட வேண்டும் என்று நினைக்கிறார்கள் தற்போதுள்ள காலங்களில். அதற்கேற்ப ஆட்களையும் செட் செய்து வைத்து விடுகிறார்கள் முன்கூட்டியே. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறதோ இல்லையோ ஆட்டம், பாட்டம் என்று திருமண நிகழ்ச்சிகளை ஒரு கலக்கு கலக்கிவிடுகிறார்கள்.

கேரளா மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமக்களை நடுவில் அமர வைத்து, முதலில் 6 பெண்கள் ஓணம் உடையில் ஆடுகிறார்கள். பிறகு தான் ஆட்டமே ஆரம்பமாகிறது. மணமகள் ஆட அதனை தொடர்ந்து மணமகனும் சேர்ந்து ஆடுகிறார்கள். பிறகு மணமகனின் நண்பர்கள் வந்து ஆட அரங்கமே அதிருகிறது. சில நிமிடங்கள் கழித்து பெண்களும் இளைஞர்களும் சேர்ந்து ஒரே மேடையில் ஆட்டம் போடுகிறார்கள். அதில் சிறிய குழந்தைகளும் கலந்து ஆடுவது பார்ப்பதற்கே வேற லெவெலில் உள்ளது. இடையில் சிறிய நேரம் ஒரு குழந்தை ஆடுவது ரசிக்க வேண்டும் என்றே தோன்றும்.

நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் கவலைகள் மறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். அந்த திருமண நிகழ்ச்சியே கலைக்கட்டி விடும் அளவுக்கு செய்து விட்டார்கள். இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி லைக்குகளை அள்ளுகிறது.