குட்டிக்குழந்தை மீது குரங்குக்கு இருக்கும் பாசத்தைப் பாருங்க… மனதையே உருக்கும் காட்சி… சிலித்துப் போவீங்க..!

            மனிதர்களை விட மென்மையும், பாசமும் கொண்டவை மிருகங்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம்  நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். 

    பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும். 

   ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். இங்கேயும் அபடித்தான். ஒருவரது வீட்டின் பக்கத்திலேயே பெரிய மரம் ஒன்று நிற்கிறது. அந்த மரத்தில் ஒரு குரங்குக் குட்டியும் உண்டு. அந்த குரங்கு குட்டி, மரத்தில் இருந்து கீழே வரும்போதெல்லாம் அதன் பக்கத்து வீட்டுக்காரர் அந்த குரங்கிற்கு சாப்பாடு கொடுப்பார்.குரங்கும் அதனால் அந்த வீட்டிற்கு உரிமையோடு வரும்.

  இந்நிலையில், அந்த வீட்டில் இருக்கும் குட்டிக் குழந்தையிடமும் குரங்கு மிகவும் பாசம் காட்டத் தொடங்கிவிட்டது. அந்தக் குட்டிக் குழந்தையிடம் குரங்கு கொஞ்சி, குலாவி தினமும் விளையாடவும் தொடங்கிவிட்டது. அந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.