கல்யாணம் பண்ண மொத நாளே இப்படியா.. மணமகனை புரட்டி எடுத்த மணமகள்..!

திருமணம் என்றாலே எல்லோரது வாழ்விலும் மறக்க முடியாத தருணம் ஆகும். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது… என்று பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். வரன் அமைவது இறைவன் கொடுத்த வரம் என்றும் கூறுவார்கள். இப்பொழுது பெரும்பாலும் திருமணம் மேட்ரிமோனி போன்ற இணையத்தின் வாயிலாக தேர்ந்தெடுகின்றனர். முற்காலத்தில் திருமணத்தை தெரிந்தவர்கள் மூலமாகவும், உறவினர்கள் வாயிலாகவும் மணமக்களை தீர விசாரித்து திருமணம் செய்து வைப்பார்கள்.

வட இந்தியாவில் திருமண நிகழ்வின் போது சில சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் போன்றை பின் பற்றபடுகின்றன. அவ்வாறு பின்பற்றப்படும் சம்பிரதாயங்களில் சில விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இப்படி விளையாடும் விளையாட்டுகளில் மணமக்கள் போட்டி மனப்பான்மையுடன் விளையாடுவார்கள். சில மணமக்கள் அவர்களுக்குள் கமிட் செய்து கொண்டு விட்டு கொடுத்து விளையாடுவார்கள்.

இந்த திருமணநிகழ்ச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டி போட்டு விளையாடுவதற்கு பதிலாக மணமகள் மற்றும் மணமகன் இருவரும் சண்டை இட்டு ஒருவர் மேல் இன்னொருவர் வன்மத்துடன் விளையாடியது உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சூழ்ந்திருந்த உறவினர்கள் இதை தடுக்க முயன்றனர், இருப்பினும் அவர்கள் உருண்டு புரண்டு சண்டையிட்டது, திருமணத்திற்கு வந்திருந்தவர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் .

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு மற்ற சமூகவலைத்தளங்களிலும் வைரல் ஆகி வருகிறது. நூறு வருடம் வாழ வேண்டிய வாழ்கையை இருவரும் ஒரே நிமிடத்தில் அவர்கள் எவ்வாறு வாழப்போகிறர்கள் என்று நிரூபித்துள்ளார்கள் என சமூகவலைத்தளத்தினர் கவலையுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.