உயரமான கம்பியில் தொங்கியபடி அழுது கொண்டிருந்த சிறுவன்… கண்டுகொள்ளாத அண்ணன்… இறுதியில் நடந்த கூத்தை நீங்களே பாருங்கள்…!

குழந்தைகள் எப்போதும் துரு துருவென எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் செய்யும் குறும்புகள் ரசிக்கும் விதத்தில் இருக்கும். இளங்கன்று பயமறியாது என்ற சொல் வழக்கு உண்டு. அதாவது சிறுவர்கள் அறியா பருவத்தில் இருக்கும் போது ஓடும் பாம்பையும் கையில் பிடித்துக்கொள்வார்கள் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். என்ன தான் சிறுவர்கள் பயம் என்ன வென்றே தெரியாதவர்களாய் இருந்தாலும் சில விஷயங்களுக்கு பயம் கொள்வது இயல்பாக இருக்கும்.

தனியாக இருக்கவும், முன் பின் தெரியாத மனிதர்களிட்ம் உரையாடுவதற்கும், இருட்டை பார்த்தாலும், சில வகை பூச்சிகள் அல்லது விலங்குகள் பார்த்தாலும் பயம் கொள்வார்கள். சில குழந்தைகளுக்கு மட்டும் இங்கு குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அவர்களுக்கு பொருட்டாகவே இருக்காது.

இங்கு காணொளியில் இடம்பெற்ற சிறுவன் ஒரு கம்பியில் இரு கைகளையும் பற்றி தொங்கியபடி அழுது கொண்டே இருக்கிறார். அதை பார்க்கும் நமக்கு உயரமான கம்பியில் தொங்கி கொண்டிருக்கும் சிறுவனை யாரும் காப்பாற்ற முன் வர வில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அடுத்த நொடி இன்னொரு சிறுவன் கைகளால் அந்த சிறுவன் தொங்கி கொண்டிருக்கும் கம்பியில் அவன் எவ்வளவு உயரத்தில் உள்ளார் என்று அளக்க…… தொங்கி கொண்டிருந்த சிறுவன் காலை ஊன்ற கூடிய தூரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. அந்த காட்சிகள் பார்ப்பவருக்கு சிரிப்பலையை ஏற்படுத்தும் என்பது சந்தேகமில்லை…… அந்த சுவாரசிய காமெடி காட்சியை இந்த காணொலியில் கண்டு களிக்கலாம்……