இவர் ரொம்ப கொடுத்து வைத்த தாத்தா.. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் கிடைக்காத சந்தோசம்.. தாத்தா போலவே நடந்து நடித்து காட்டிய குழந்தை..!

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன குறும்புகளை அதனால் தான் பெற்றோரே வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். இங்கேயும் அப்படித்தான்.

வீட்டில் தாத்தா மீது மிகவும் பாசமாக வளர்கிறது குட்டிக் குழந்தை ஒன்று. தாத்தா, தன்வயதான காலத்தில் கூன் விழுந்து குனிந்தபடியே நடந்துவருகிறார். எப்போதும் கையில் கைத்தடி வைத்தும் அவர் நடப்பார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் அவரது பேரக்குழந்தையும் தாத்தாவின் கைத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டு அவரைப் போலவே கூனல் விழுந்த தாத்தாவைப் போல் நடக்கிறது. ஒன்றரை வயதே ஆன அந்தக் குழந்தை தாத்தாவை உள்வாங்கியிருக்கும் விதம் அந்தக் குடும்பத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தாத்தா எப்போதும் அந்த குழந்தையை மிகவும் பாசத்தோடு கொஞ்சுவாராம். அதனாலேயே அந்த பாசத்தில் குழந்தை அவரை அதிகமாக பார்த்துப்பழகி அவர் போலவே நடந்து காட்டியுள்ளது.

இது கேலி செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதல்ல. அதேநேரம் எத்தனை தாத்தாவுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் என்பது தெரியாத விசயம். வீடியோவை நீங்களே பாருங்கள். சிலிர்த்துப் போவீர்கள்.