இந்த குட்டி தேவதையின் நடனத்தைப் பாருங்க….என்ன ஒரு அழகான நடனம்… க்யூட்டாக பட்டையைக் கிளப்பிய குட்டி பாப்பா…!

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் ஒரு குட்டிதேவதை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். குட்டி தேவதை ஒன்று செம க்யூட்டாக நடனம் ஆடுகிறார். புல்லட் பாண்டி படத்தில் வரும் பாடலுக்கு செம க்யூட்டாக அவர் ஆடும் காட்சி இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

அதிலும் சினிமாவில் வரும் நடனக் கலைஞர்களுக்கு இணையாக அவர் நடனத்தில் பட்டையைக் கிளப்புகிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் மறக்காம சுத்திப் போட்டுருங்க என கமெண்ட் செய்துவருகின்றனர்