இந்த குட்டி தேவதையின் சந்தோசத்தைப் பாருங்க… பணத்தில் இல்ல சந்தோசம்…இந்த மனதைப் பாருங்க…!

    ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

          குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். வளரிளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையையும், அவர்களின் ரசனையையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். 

 ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

  இங்கேயும் அப்படித்தான் கேரளத்தில் ஒரு கோயில் விசேச நிகழ்ச்சிக்கு செண்டை மேளம் அடித்து அசத்துகிறார்கள். அதை ஒரு குட்டி தேவதைப் பார்க்கிறது. அந்த க்யூட்டான இசைக்கு மயங்கிய குட்டி தேவதை, செம மாஸாக அந்த இசைக்கு ஏற்ப எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆட்டம் போடுகிறது. இந்த பிஞ்சு தேவதையின் ஆட்டத்தைப் பாருங்கள். நம்மையும் அறியாமல் நமக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இதோ அந்தக் காட்சி!…