இந்த இரு சிறுவர்களும் செய்த தரமான சம்பவத்தைப் பாருங்க… இதுக்கு முன்பு காசு, பணம் எதுவுமே ஒரு பொருட்டு இல்லை..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே இரு குழந்தைகள் செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தைகள் அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? பொதுவாகவே மனிதர்களில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். அதிலும் பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள், ஏழைகளின் பக்கத்தில் இருப்பதைக் கூட விரும்புவதில்லை. ஆனால் இதெல்லாம் நன்கு வளர்ந்தவர்களின் பிரச்னைதான். குழந்தைகள் எப்போதுமே மனதால் அழகானவர்கள். இதோ இங்கேயும் அப்படித்தான்.

ஒரு பணக்கார வீட்டுக்குழந்தை திருவிழாக் கடைக்கு வந்திருந்தது. அப்போது அங்கு பலூன் விற்றுக்கொண்டிருந்த ஒரு ஏழைத்தாயின் குழந்தை இந்த பணக்காரக் குழந்தையைப் பார்த்தது. இருவரும் பாசத்தோடு கட்டி அணைத்துக் கொண்டனர். இந்த காட்சி காசு, பணம் எதுவுமே பிஞ்சுக் குழந்தைகளின் அன்புக்கு முன்பு பெரிது இல்லை என படம்போட்டுக் காட்டுகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.