இது எந்த ஊரு நடனம் தெரியலையே… நடுரோட்டில் வேற லெவலில் ஆட்டம் போட்ட பெண்மணி..!

                     முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

    அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். அதிலும் நடனம் எப்போதுமே பெண்களின் பேவரட். அதில் அசத்தாமல் விட்டுவிடுவார்களா?

  அதிலும் நாம் பெண்கள் ஆடும் கலாச்சார நடனம் என வழக்கமாகவே பரதநாட்டியத்ததைத் தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கே அவரது குழுவினர் இசைக்க, சாம்பல்புறி என்னும் பாரம்பர்ய நடனத்தை ஆடுகிறார் பெண் ஒருவர். முட்டிக்கு மேல் ஏற்றிக்கட்டிய சேலை..தலையில் குஞ்சத்துடன் காட்டன் சேலை கட்டி இந்த பெண் நடுரோட்டில் செம ஆட்டம் போடுகிறார். ஆனால் அது நம் பாரம்பர்யமான நடனங்களில் ஒன்றுதான். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.