சாப்பிட்டு விட்டு முரட்டு தூக்கத்தை போட்ட குட்டியானை… எழுப்பி பார்த்து எழுப்பாததால் தாய் யானை செஞ்சதை பாருங்க..!

தூக்கம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் புத்துணர்வை கொடுக்கும் ஓன்று. நன்றாக தூங்கினால் நாள்முழுக்க அலுப்பின்றி வேலை பார்க்க முடியும் இது மனிதர்களுக்கு மட்டும் இன்றி விலங்குகளுக்கும் பொருந்தும்.

அசந்து தூங்கி கொண்டிருந்த குட்டி யானையை தாய் யானை எழுப்ப முயன்றது. குட்டி யானை கனவு உலகத்திற்கு சென்றது போல் அசைவற்று தூங்கிக்கொண்டிருந்தது. தூங்கிக்கொண்டிருக்கும் போது இடியே விழுந்தாலும் நான் எழும்ப மாட்டேன் என்கிற ரீதியில் குட்டி யானை தாய் யானை எழுப்புவதையும் அறியாது நன்றாக தூங்கி கொண்டிருந்தது.

கலக்கமடைந்த தாய் யானை குட்டி யானையை எழுப்புவதற்கு பாதுகாவலர்களை உதவிக்கு அழைத்தது. பாதுகாவலர்களும் எழுப்ப முன்றனர், இருந்தும் அசைவின்றி தூங்கி கொண்டிருந்தது, இறுதியில் பாதுகாவலர் தனது கையால் அதனை தட்டி எழுப்பி விட்டார். ஒரு வழியாக குட்டி யானை தூக்கத்தில் இருந்து விடுபட்டு எழுந்தது.

இந்த அருமையான காட்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.