யோகா செய்த அப்பா.. பார்த்துவிட்டு க்யூடாக மகள் செய்த சேட்டை.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

பொதுவாகவே பெரியவர்கள் செய்வதை அப்படியே குழந்தைகள் திருப்பிச் செய்வது வழக்கமான ஒன்றாகும். இங்கே ஒரு குழந்தை வேற லெவலில் திரும்பி செய்த காட்சிகள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் புத்திக்கூர்மை அனைவரையும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

குழந்தைகளின் சேட்டை சில நேரம் எரிச்சலைத் தந்தாலும், பலநேரங்களில் வெகுவாக ரசிக்கவைக்கும். இங்கேயும் அப்படித்தான். ஒரு குழந்தையின் செயல் வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. குறித்த இந்த வீடியோவில் அப்பா, யோகா செய்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு அவரது குழந்தையும் அதேபோல் செய்ய முயல்கிறது. ஒருகட்டத்தில் தன் அப்பாவுக்கு அது கடும் தொல்லை கொடுக்கிறது. கடைசியில் அப்பா அதற்கும் தனி பாய் போட்டு யோகா செய்யச் சொல்கிறார். தொடர்ந்து அந்த குழந்தை செய்யும் செயல் இணையத்தில் வேற லெவல் என்றே சொல்லலாம். இதோ அந்த வீடியோவைப் பாருங்கள். நீங்களும் வெகுவாக ரசிப்பீர்கள்.