கிரிக்கெட் ஆடி..பாட்டுக்கு ஆடி..செம மாஸாக நடந்த கல்யாணம்.. காங்கிரீட் வண்டியில் வந்த கல்யாணப் பொண்ணு..!

       திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில் நான் எப்படி ஆடியிருக்கேன் பாருங்கள் என மணப்பெண்கள் தாங்களே வீடியோவே போஸ்ட் செய்வதும் பேஷன் ஆகிவிட்டது. 

         திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. 

        இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

  அந்தவகையில் கேரளத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தின் போது மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் செம மாஸாக சொந்தங்கள் முன்பிருந்து கிரிக்கெட் ஆடினார்கள். தொடர்ந்து புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி…என் சாமி பாடலுக்கு ஆடினார்கள். தொடந்து கல்யாண மேடைக்கு மணப்பெண்ணை காங்கிரீட் போட சிமெண்ட், கல், மண் எல்லாம் எடுத்துச்செல்லும் காங்கிரீட் வண்டியில் வைத்து அழைத்து வந்தார் கல்யாண மாப்பிள்ளை. ஆனாலும் இவர்களது அலப்பறைக்கு அளவே இல்லையா? இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.