இந்த குழந்தை மாம்பழம் சாப்பிட்டு கொடுத்த செம க்யூட்டான ரியாக்சனை பாருங்க… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..!

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும்.அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான். ஒரு குழந்தைக்கு அதன் தாய் முதன் முதலாக மாம்பழத்தைக் கொடுக்கிறார்.

அதை அந்த குழந்தை சாப்பிடும் அழகே தனிதான். மாம்பழத்தின் சாறை குழந்தை ரசித்து சாப்பிடும் அழகைப் பார்க்க இருகண்கள் போதாது. அந்த அளவுக்கு செம க்யூட்டாக இருக்கும் இந்த தேவதையின் ஸ்வீட் ரியாக்சனை நீங்களே பாருங்களேன். நீங்களும் சிலிர்த்துப் போவீர்கள்.