சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த டும்கான் மாரியா இது? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா…?

     சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. மெகா ஹிட் படமான சுப்பிரமணியபுரம் காதலையும், சாதியையும் நுட்பமாக பதிவு செய்தது.

  இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவின் நாயகி சுவாதி நடித்தார். இந்த படத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அதிலும் ஜெய், சுவாதி பாடும் கண்கள் இரண்டால் பாடல் அந்த நேரத்தில் ஒலிக்காத இல்லங்களே இல்லை. இந்தப்படத்தில் டும் கான் என்னும் பாத்திரத்தில் மாரி என்பவர் நடித்திருப்பார். கால் குறைபாடுடைய கேரக்டரில் நடித்த மாரி தான் அந்தப் படத்தின் திருப்புமுனைக் காட்சியாக வரும். 

 இப்போது அவரை பத்திரிகையாளர் புஹாரி என்பவர் தன் யுடியூப் சேனலுக்காக சந்தித்து இருக்கிறார். அவருடைய புஹாரி ஜங்சனில் மனம் விட்டுப் பேசிய மாரி, சசிகுமார் அண்ணனுக்கு என் மேல கோபம். நான் கேட்குறவங்களுக்கு எல்லாம் அவுங்க நம்பர் கொடுத்துட்டேன். அதேமாதிரி தண்ணியைப் போட்டுட்டு சலம்புனேன். அதுவும் அவருக்குப் பிடிக்கலை. என் வீடு சின்ன வீடுதான். என் நடிப்பைப் பார்த்து இன்னும் யாருமே கூப்பிடலை. ‘ஒத்தகாலை வைச்சு நானே உழைக்கும்போது உங்களுக்கு என்னடா கேடு’ன்னு படத்துல கேட்குற மாதிரி தான் எல்லா வேலையும் செய்வேன். 

    மாரி, ஒருநாள் வழக்கம் போல் டீக்கடையில் அமர்ந்திருந்தாராம். அப்போது அங்கு வந்த நான்கு பேர் இவரிடம் என்ன வேலை செய்றீங்க எனக் கேட்க, செல்லூரில் ஒரு கடையில் மைக் செட்  வேலை பார்க்குறேன் என மதுரைக்கே உரிய கெத்தான மொழியில் பேசியிருக்கிறார்.

   உடனே நால்வரும், ‘நாங்க எங்க படத்தில் நடிக்க ஆள் தேடிக்கிட்டு இருக்கோம். வர்றியா? எனக் கேட்டது, உற்சாகமாக ஓகே சொல்லிவிட்டாராம் மாரி. கொஞ்சம் என்னை போட்டோ சூட்டும் எடுத்தார்கள். நான் கூட ஏதோ படத்தில் கொஞ்சம் காட்சிகளில் தான் வருவேன்னு நினைச்சுகிட்டேன். ஆனா கிளைமேக்ஸில் என்னை ஹீரோ மாதிரி காட்டிட்டார் சமுத்திரகனி அண்ணன்.’என நெகிழும் மாரி…அதாங்க சுப்பிரமணியபுரம் டும்கான் சமுத்திரகனி பெயரை தன் கையில் பச்சையும் குத்தி வைத்துள்ளாராம்.

  தொட்டிஜெயா படம் பார்க்க அதேபோல் கருப்பு உடைக் கெட்டப்பில் இருக்கும் போது தான் சான்ஸ் கிடைச்சுது இப்போ கிடைச்ச வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். சசி அண்ணன் வாய்ப்பு கொடுத்தா வாழ்க்கை பிரகாசமாகும். எனக்கு நடிப்பு திறமை இருக்கு. வாய்ப்பு தான் இல்லை என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.