மணமேடையில் புரோகிதருக்கு நடந்த சம்பவம்… காண்டாகி என்ன செஞ்சாரு பாருங்க…

   கல்யாண வீட்டில் திருமண வீட்டில் மாபிள்ளையும், பொண்ணும் பதட்டத்தில் இருப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால்  திருமணத்தை செய்துவைக்கும் அர்ச்சகரே பதட்டமாகிவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அதுதான் இங்கே நடந்தது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

    திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

   அதிலும் மாப்பிள்ளை பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது. ஆனால் இந்த திருமணத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அதெல்லாம் இல்லாத குறையை கல்யாணம் செய்துவைக்க வந்த புரோகிதர் தீர்த்துவிட்டார். எப்படி எனக் கேட்கிறீர்களா? இங்கே புரோகிதர் இருந்து மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது மணமக்களின் தோழன், தோழிகள் கூட்டமாக சேர்ந்து கொண்டு மணமக்களின் மேல் ஸ்பிரே அடித்தனர். ஆனால் இதில் அவர்களின் பக்கத்தில் இருந்த புரோகிதர் மேலும் ஸ்பிரே பட்டது. ஒருகட்டத்தில் புரோகிதரே தெரியாத அளவுக்கு ஸ்பிரேயில் மூழ்கிப் போனார். செம டென்ஷன் ஆகி, புரோகிதரே எழுந்து ஓடிவிட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.